சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கிளாட்-2025 தேர்வு: வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிசீலனை!

கிளாட்-2025 தேர்வு விவகாரம் தொடர்பான வழக்குகளை ஏதேனும் ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :15 ஜனவரி 2025, 8:04 am

DIN

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஏதேனும் ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களில், கிளாட் நுழைவுத் தேர்வு 2025-ல் கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் தவறானவை என்று கூறி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளுக்கு பல வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதற்கு மாற்றா, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கே அனைத்து வழக்குகளையும் மாற்றி, அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள பரிசீலிப்பதே சிறந்ததாக இருக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ரிட் மனுக்களை ஒரு உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இது விரைவானதாக இருக்கும் என்பதால், பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் விசாரணையின்போது இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என்றும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு இது தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.