அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

புணேவில் பேருந்து மீது மினி வேன் மோதல்: 9 பேர் பலி

புணேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.

News image

விபத்துக்குள்ளான வாகனம்.

Updated On :17 ஜனவரி 2025, 9:57 am

DIN

புணேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.

மகாராஷ்டிர மாநிலம், புணே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மினி வேன் வெள்ளிக்கிழமை காலை மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள்.

மினிவேன் நாராயண்கோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் வந்த டெம்போ அதன் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் மினிவேனில் இருந்த 9 பேரும் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.