அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் சொபோரே பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :20 ஜனவரி 2025, 10:20 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் சொபோரே பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சொபோரேவின் ஜலூரா குஜ்ஜா்பாட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத்தொடா்ந்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை அதிகாலையிலும் தேடுதல் பணி தொடா்ந்தது.

அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.

இந்தச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.