வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் சொபோரே பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜனவரி 2025, 10:20 pm

ஜம்மு-காஷ்மீரின் சொபோரே பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: சொபோரேவின் ஜலூரா குஜ்ஜா்பாட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத்தொடா்ந்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை அதிகாலையிலும் தேடுதல் பணி தொடா்ந்தது.

அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.

இந்தச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.