சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ஆம் ஆத்மி தொண்டர்களை மிரட்டுகிறது பாஜக: அதிஷி

பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுப்பது குறித்து கல்காஜி தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதிஷி கடிதம்

News image

அதிஷி - கோப்புப் படம்

Updated On :21 ஜனவரி 2025, 6:27 pm IST

தில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தொடர்களை பாஜக தலைவர் ரமேஷ் பிதூரியின் மருமகன் மிரட்டுவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுப்பது குறித்து கல்காஜி தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு அதிஷி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''தில்லியின் கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ரமேஷ் பிதூரி என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் அவதூறான கருத்துகளை தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. நான் கொடுத்த புகாரின்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்தலில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தவறான நடத்தைக்கு தண்டனை கிடையாது என்பதற்காக உதாரணமாக இச்சம்பவம் மாறியுள்ளது. இதனால்தான் பாஜக தலைவர்களிடமிருந்தும் தொண்டர்களிடமிருந்தும் வன்முறையும் மிரட்டலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கின்றனர். இது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆம் ஆத்மியின் தொண்டர்களான சஞ்சய் குப்தா உள்ளிட்ட 7 பேருக்கு பாஜக தொண்டர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாஜக தலைவர் ரமேஷ் பிதூரியின் மருமகன் பேரில் இது நடக்கிறது.

தொண்டர்களிடமே இவ்வாறு என்றால், இந்தப் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடம் அவர்கள் எத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

இதுபோன்ற வன்முறைகள் கல்காஜி தொகுதியில் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான வாக்குப்பதிவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இது தொடர்பாக குறிப்பிட்ட பாஜக தொண்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மற்ற கட்சித் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு கல்காஜி தொகுதி முழுக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்'' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.