சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் தயார்: பிரியங்கா காந்தி

அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் காந்தி தயாராக உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

News image

பிரியங்கா காந்தி - PTI

Updated On :21 ஜனவரி 2025, 8:25 pm IST

அரசியலமைப்பைக் காக்க தனது வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் காந்தி தயாராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

1924 ஆம் ஆண்டு 39வது காங்கிரஸ் மாநாட்டிற்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கியதன் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் 'காந்தி பாரத்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அக்கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது,

''அரசியலமைப்பை மாற்றுவதற்கான பாஜகவின் முயற்சிகளுக்கு எதிராக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிவருவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையைப் பேசுவதிலிருந்து ராகுல் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்று கோழைகள் அல்ல. உண்மைக்கான இயக்கத்தைக் கொண்டுள்ளோம்.

அரசியலமைப்பைக் காக்க தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல் ஏற்கனவே கூறியுள்ளார். இதேபோன்று கட்சித் தொண்டர்களும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து பல்வேறு அரசாங்கம் மாறியுள்ளது. ஆனால் எந்தக் கட்சியின் அமைச்சரும் அமித் ஷாவைப் போன்று டாக்டர் அம்பேத்கரை அவமதித்தது இல்லை. அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.