தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தலைநகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உறுதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விடியோ ஒன்றை வெளியிட்ட அவர்,
வேலைவாய்ப்பில் தனது கவனத்தை வலியுறுத்திய அவர்.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே எனது முதன்மையான முன்னுரிமை. ஆம் ஆத்மியின் குழு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது.
தனது அரசின் சாதனையை எடுத்துரைத்த கேஜரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு 2 ஆண்டுகளுக்குள் 48 ஆயிரம் அரசு வேலைவாய்ப்பினை வழங்கியதாகவும், இளைஞர்களுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார்த் துறை வேலைகளை வழங்குவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலைவாய்ப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது எங்களுக்குத் தெரியும், எங்கள் நோக்கங்கள் நேர்மையானவை. மக்களின் ஆதரவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் தில்லியில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக நகரில் ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து கடுமையான போட்டியை ஆம் ஆத்மி எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 எரிபொருள் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு கேஜரிவால் வலியுறுத்தல்

ராமா் கோயிலில் மகா கொள்ளை: பெரும் அரக்கா்களுக்கு தொடா்பு - அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

ஜூன் 26-ல் அயோத்தி கோயிலுக்கு அரவிந்த் கேஜரிவால் செல்ல திட்டம்

மதுபானக் கொள்கை வழக்கு: கேஜரிவால், சிசோடியாவுக்கு எதிரான சிபிஐ மனு ஜூலை 16இல் விசாரணை
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



