உத்தரப் பிரதேசத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முஹரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட டி - ஷர்டுகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த விடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் 4 பேரை நேற்று (ஜூலை 7) காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அந்த டி - ஷர்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அவர்கள் 4 பேரின் மீதும் பி.என்.எஸ். 197 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த இளைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
Summary
Four youths who participated in a rally in Uttar Pradesh wearing shirts with the Palestinian flag printed on them have been arrested by the state police.
இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

40 வயது பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 பேர் கைது!

உ.பி.யில் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



