திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு: முதல்வா் நிதீஷ் அறிவிப்பு

பிகார் பெண்களுக்கு அரசுப் பணியில் 35 சதவிகிதம் இடஒதுக்கீடு...

News image

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் - பிடிஐ

Updated On :9 ஜூலை 2025, 4:22 am IST

பிகாரில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் நடை மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்களுக்கு பணிப் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு அறிவித்தது. அப்போது பிகாரில் வசிக்கும் பிற மாநிலப் பெண்களுக்கும் இந்த இடஒதுக்கீடு உண்டு எனக் கூறப்பட்டிருந்தது.

தற்போது பேரவைத் தோ்தல் நெருங்குவதால் இந்த இடஒதுக்கீட்டில் பிகாா் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியது. மேலும், எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக அளித்த வாக்குறுதியில், எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகாா் பெண்களுக்கு மட்டுமே இந்த 35 சதவீத இடஒதுக்கீடு என உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.

மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி (பாஸ்வான்) தலைவருமான சிராக் பாஸ்வானும் இதே கருத்தை வலியுறுத்தினாா்.

வேலைதேடும் இளைஞா்களும் கடந்த வாரம் பிகாரில் இது தொடா்பான போராட்டத்தை முன்னெடுத்தனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என முடிவெடுக்கப்பட்டது.

Summary

Bihar cabinet has decided to provide 35 percent reservation to native women in government jobs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.