பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவா முதல்வரை குற்றஞ்சாட்டிய நடிகர் மீது வழக்கு!

கோவா முதல்வர் மீது குற்றம்சுமத்திய நடிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோவா முதல்வர் பிரமோத் சவாந்த், நடிகர் கௌரவ் பக்‌ஷி

Updated On :10 ஜூலை 2025, 1:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவாந்த் மீது குற்றம்சுமத்திய நடிகர் கௌரவ் பக்‌ஷி மீது அம்மாநில குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவா மாநிலத்தில், உச்ச நீதிமன்ற அறுவுறுத்தல்களை மீறி முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அவரது அரசு அம்மாநிலத்தின் வனப்பகுதியை அழித்து வருவதாகக் குற்றம்சுமத்தி நடிகர் கௌரவ் பக்‌ஷி விடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மக்களிடம் அச்சத்தை உருவாக்க தவறான தகவல்களுடன் விடியோ வெளியிட்டுள்ளதாக, நடிகர் பக்‌ஷி மீது கடந்த ஜூலை 2 ஆம் தேதி துணை வனப் பாதுகாப்பாளர் ஆதித்யா மதன்பத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்மூலம், நடிகர் பக்‌ஷி மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 353 (1) மற்றும் 196 (1) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, நடிகர் கௌரவ் பக்‌ஷி நேற்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், காடுகள் குறைந்து வருவது குறித்து சமூக ஊடகங்களில் பேசியதற்காக, தன் மீது பொய்யான மற்றும் அற்பமான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இத்துடன், கடந்த ஜூலை 4 ஆம் தேதி காவல் துறை அதிகாரிகள் எந்தவொரு காரணமும் கூறாமல், தனது வீட்டிற்கு வந்து தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கடந்த காலத்தில் தான் சந்தித்தபோது நீதிமன்றங்கள் தன்னைக் காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குற்றப்பிரிவு அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொடுக்க மறுத்தாகக் குற்றம்சாட்டிய அவர், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Summary

The state's Crime Branch police have registered a case against actor Gaurav Bakshi, who has accused Goa Chief Minister Pramod Sawant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.