ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர் வேறு நாடுகளில் சந்தித்துப் பேச உள்ளனர்.
ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் தியான்ஜினில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் தலைநகர் பீஜிங் சென்று அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சமீபத்தில் சீனாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அங்குச் செல்லவுள்ளார்.
2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளான நிலையில், கடந்த 5 ஆண்களில் ஜெய்சங்கரின் முதல் சீன வருகை இதுவாகும்.
Summary
External Affairs Minister S Jaishankar will travel to China to participate in the foreign ministers' meeting of the SCO bloc in the Chinese city of Tianjin next week, an official announcement here said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா, சீனாவுடன் ஆலோசனை; ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!

மீட்புப் பணிகளுக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த வெனிசுவேலா!

அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்- பிரதமா் மோடி வலியுறுத்தல்

மங்கோலியா, தென் கொரியாவுக்கு ஜெய்சங்கர் இன்று 4 நாள் பயணம்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



