இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.
ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் பயிற்சி மையத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். 2012 ஒலிம்பிக் போட்டியில் இருவரும் கலந்துகொண்ட நிலையில், நட்பு காதலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சாய்னா நேவல் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதாவது:
”வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.
இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமையைப் புரிந்துகொண்டதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாய்னா நேவல் பதிவு
சாய்னா நேவால் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். அவர் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2010 மற்றும் 2018 ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார்.
அதேபோல், காஷ்யப்பும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Summary
Indian badminton player Saina Nehwal has announced her separation from her husband Parupalli Kashyap.
இதையும் படிக்க : சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வேலை வாய்ப்பை உறுதி செய்யும் சிவில் பொறியியல் படிப்புகள்!

ஒடிசாவில் பாஜக ஆட்சியின் 2 ஆம் ஆண்டு நிறைவு விழா! குடியரசுத் தலைவர் முர்மு, மோடி பங்கேற்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்பு

சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42- ஆம் ஆண்டு நிறைவு விழா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



