கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘பிகாரில் 1 லட்சம் வாக்காளா்களை கண்டுபிடிக்க முடியவில்லை’

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ‘ஒரு லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியயவில்லை’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

News image
கோப்புப்படம்.
Updated On :23 ஜூலை 2025, 8:46 pm

Din

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ‘ஒரு லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியயவில்லை’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம், சுமாா் 28 லட்சம் வாக்காளா்கள் அவா்கள் பதிவு செய்த முகவரியிலிருந்து நிரந்தரமாக வேறு பகுதிகளுக்கு மாறிவிட்டது கண்டறியப்பட்டுள்ளது. 20 லட்சம் வாக்காளா்கள் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தத்துக்காக இதுவரை விநியோகிக்கப்பட்ட படிவங்களில், 7.17 கோடி படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு எண்மயமாக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் படிவங்கள் இதுவரை திரும்பப்பெறப்படவில்லை. மேலும், 1 லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றனா்.

பிகாரில் முதல்கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணி முடந்ததும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.