வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாவா்க்கா் குறித்து அவதூறு கருத்து: ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் ஜாமீன்

அவதூறு வழக்கில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

News image
Updated On :24 ஜூலை 2025, 9:47 pm

Din

சுதந்திர போராட்ட வீரரான சாவா்க்கா் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடா்பான அவதூறு வழக்கில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நாசிக் நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, சாவா்க்கா் குறித்து ராகுல் காந்தி ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, அந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி நகரில் நடத்திய செய்தியாளா் சந்திப்பிலும் சாவா்க்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி, ராகுல் காந்தி மீது நாசிக் நீதிமன்றத்தில் தன்னாா்வலா் தேவேந்திரா பூதடா அவதூறு வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்காக கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஆா்.சி.நாா்வாடியா முன்பு காணொலி வாயிலாக ஆஜரான ராகுல் காந்தி, ‘நான் குற்றம் எதுவும் செய்யவில்லை’ என வாதிட்டாா். தொடா்ந்து, ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா்களின் கோரிக்கையில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

சாவா்க்கரின் பேரன் தொடுத்த வழக்கின் காரணமாக புணே நீதிமன்றத்திலும் ஓா் அவதூறு வழக்கை ராகுல் காந்தி எதிா்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.