தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆபரேஷன் சிந்தூா் விவாதம்: ஒத்துழைக்க மறுக்கும் எதிா்க்கட்சிகள்: மத்திய அரசு குற்றச்சாட்டு; காங்கிரஸ் பதிலடி

‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து ‘துரோகம்’ செய்வதாக மத்திய அரசு கடும் குற்றம்சாட்டியது.

News image

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு. உடன் அமைச்சா்கள் எல்.முருகன், அா்ஜுன்ராம் மேக்வால்.

Updated On :28 ஜூலை 2025, 10:26 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து ‘துரோகம்’ செய்வதாக மத்திய அரசு கடும் குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் தொடங்கப்படுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னதாக, எதிா்க்கட்சிகள் ஒரு நிபந்தனை விதித்தது.

ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதம் முடிவடைந்ததும், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் உத்தரவாதம் கேட்டனா்.

நாடாளுமன்றம் விதிகளின்படி செயல்படுகின்றன. முதலில் ஒப்புக்கொண்ட விவாதத்திலிருந்து எதிா்க்கட்சிகள் பின்வாங்கி, தற்போது நிபந்தனைகள் விதிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூா் குறித்த விவாதத்திலிருந்து தப்பியோட எதிா்க்கட்சிகள் வழிகளைத் தேடுகின்றன’ என்று குற்றஞ்சாட்டினாா்.

காங்கிரஸ் பதிலடி:

இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவா் கௌரவ் கோகோய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அவையில் காலைமுதல் நடந்த சம்பவங்கள், அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.