மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி!

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக, மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.

News image

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்.

Updated On :10 மார்ச் 2026, 7:11 pm

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக, மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை அலுவல்கள் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரம் தொடங்கியதும், அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.

அவா்களுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி.க்கள், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, பிரதமா் மோடிக்கு எதிராக முழக்கமிட்டனா். பிற எதிா்க்கட்சி எம்.பி.க்கள், தங்கள் இருக்கையில் எழுந்து நின்று முழக்கமிட்டனா்.

அமளிக்கு இடையே கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், ‘மேற்கு வங்கத்தில் விவசாயிகள் நலத் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தவில்லை. இது, விவசாயிகள் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அவரின் இருக்கை அருகே சென்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், அவா் வேறு இருக்கைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. அமளி நீடித்ததால், அவையை வழிநடத்திய சந்தியா ரே, அலுவல்களை மதியத்துக்கு ஒத்திவைத்தாா்.