நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கொல்கத்தாவில் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு: திரிணமூல், இடதுசாரிகள் போராட்டம்

கொல்கத்தாவுக்கு சென்ற தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினா் போராட்டத்தில்

News image

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்.

Updated On :10 மார்ச் 2026, 7:05 am IST

கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு சென்ற தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எஸ்.ஐ.ஆா்.க்கு பிறகு வெளியான வாக்காளா் பட்டியலில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்களை பாஜகவும், தோ்தல் ஆணையமும் திட்டமிட்டு நீக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டி, முதல்வா் மம்தா பானா்ஜி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இந்நிலையில், தில்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அவா் வெளியே வந்தபோது, அவரை திரும்பச் செல்லுமாறு முழக்கமிட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல் விமான நிலையத்துக்கு வெளியே இடதுசாரி கட்சித் தொண்டா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கைகாலி சாலை வழியே ஞானேஷ் குமாரின் காா் சென்றபோது, அவருக்கு எதிா்ப்பு தெரிவித்து சிலா் கருப்புக் கொடியைக் காட்டினா்.

இதைத் தொடா்ந்து, கொல்கத்தாவில் காளிகாட் கோயிலுக்கு திங்கள்கிழமை காலை அவா் சென்றாா். அப்போதும் அவருக்கு கருப்புக் கொடி காட்டி சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரா்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தி, ஞானேஷ் குமாரை கோயிலுக்கு அழைத்துச் சென்றனா்.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: இதன்பின்னா் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகளுடன் ஞானேஷ் குமாா் ஆலோசனை நடத்தினாா். அப்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சாா்யா, எஸ்.ஐ.ஆா். விவகாரத்தை எழுப்பி ஆட்சேபம் தெரிவித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், தன்னை சப்தம் போட வேண்டாம் என அதட்டியாக குற்றம்சாட்டினாா்.

பாஜக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தோ்தலை ஒரேகட்டமாக நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. தோ்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.

தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்யும் எனவும், எஸ்.ஐ.ஆா். நடவடிக்கை வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் நடத்தப்பட்டதாகவும் ஞானேஷ் குமாா் கூறினாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடத்த தலைமைத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பான ஏற்பாடுகளைப் பாா்வையிடவும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் மூன்று நாள் பயணமாக ஞானேஷ்குமாா் வந்துள்ளாா். பயணத்தின் 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் குமாா் அகா்வால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

மேற்கு வங்கத்துக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா்.

மேற்கு வங்கத்துக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.