ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தவர் கைது!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தவர் கைதானது பற்றி...

News image

கோப்புப்படம்

IANS

Updated On :3 ஜூன் 2025, 7:00 am

DIN

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த பாகிஸ்தானியரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கொடுத்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் டான் டரன், மொஹல்லா ரோத்பூர் பகுதியில் வசித்து வரும் ககன்தீப் சிங், பாகிஸ்தானில் காலிஸ்தான் பயங்கரவாதி கோபால் சிங் சாவ்லாவுடன் இணைந்து சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் ககன், பாகிஸ்தான் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடந்த சமயத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு பகிர்ந்துள்ளார்.

இந்திய உளவுத் துறை அளித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் டான் டரன் பகுதி போலீசாருடன் பஞ்சாப் போலீஸ் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் இந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.