கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பறித்துச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பறித்துச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது.

News image

குரங்கு.

கோப்புப்படம்.

Updated On :7 ஜூன் 2025, 11:26 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பறித்துச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தனது குடும்பத்தினருடன் பிருந்தாவனத்திற்கு வந்தார். அவரது மனைவியின் பையில் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்தன.

தாக்குர் பாங்கே பிஹாரி கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, ​​குரங்கு ஒன்று அவரிடமிருந்து பையைப் பறித்துச் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர்வாசிகள் குரங்கிடமிருந்து பணப்பையை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு புதரில் இருந்து பணப்பையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பணப்பையில் இருந்த நகைகள் அப்படியே இருப்பது கண்டறியப்பட்டு, அது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பப்பட்டது. சதரின் வட்ட அதிகாரி சந்தீப் குமார், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் பறிக்கப்பட்ட பணப்பை மீட்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.