தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்.

News image

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு. - DNS

Updated On :12 ஜூன் 2025, 12:58 pm IST

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது.

ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தலைமையில் கூட்டணி ஆட்சி இருந்து வருகிறது. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.

ஆந்திரத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்தின்கீழ், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தப்படும். இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இதற்காக ரூ. 8,745 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் இதில் பயன் பெறலாம் என்று கூறியுள்ள ஆந்திர அரசு, அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் பள்ளிகளில் பயில வேண்டும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், 75% பள்ளி வருகைப் பதிவு இருக்க வேண்டும் உள்ளிட்ட ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

மேலும், வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதிமுதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.