திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

விமானம் விழுந்தது விபத்தா? சம்பவமா? குழப்புகிறது ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிர்வாகத்தின் பதிவால் ஏற்பட்டிருக்கும் குழப்பம்...

News image

ஏர் இந்தியா நிர்வாகம் பகிர்ந்த எக்ஸ் பதிவு

Updated On :12 ஜூன் 2025, 4:40 pm IST

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதனை சம்பவம் எனக் குறிப்பிட்டு ஏர் இந்தியா நிர்வாகம் பதிவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த 242 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், விபத்து குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளது. இதனை நாங்கள் உறுதி செய்கிறோம். கூடுதல் தகவல்களை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது எக்ஸ் தளத்தில் விரைவில் பகிர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

விமானம் விழுந்த சம்பவத்தை விபத்து எனக் குறிப்பிடாமல், தாக்குதலுக்கு உள்ளானது போல் சம்பவம் எனக் குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால். விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ எனக் கூறப்படும் அவசர தகவலை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.