ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

News image

அசாதுதீன் ஒவைசி

Updated On :23 ஜூன் 2025, 12:52 am IST

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அணுஆயுத பரவலுக்குத் தடை விதிக்கும் ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியிருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ஈரான் அணுஆயுத மையங்கள் மீது அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பது ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியதாகும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிற நாட்டுடன் அமெரிக்கா சண்டையிடக் கூடாது என அந்நாட்டு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. இதையும் மீறி ஈரான் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீா் கோரிக்கை வைத்திருப்பது வேடிக்கையானது’ என்றாா்.