தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

News image

அசாதுதீன் ஒவைசி

Updated On :22 ஜூன் 2025, 7:22 pm

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அணுஆயுத பரவலுக்குத் தடை விதிக்கும் ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியிருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ஈரான் அணுஆயுத மையங்கள் மீது அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பது ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியதாகும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிற நாட்டுடன் அமெரிக்கா சண்டையிடக் கூடாது என அந்நாட்டு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. இதையும் மீறி ஈரான் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீா் கோரிக்கை வைத்திருப்பது வேடிக்கையானது’ என்றாா்.