தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு

ஏா் இந்தியா குறுகிய ரக விமான சேவை குறைக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

ஏா் இந்தியா

Updated On :22 ஜூன் 2025, 9:00 pm

குறுகிய ரக விமானங்களைக் கொண்டு 19 வழித்தடங்களில் இயக்கப்படும் 118 வாராந்திர விமான சேவைகளை தற்காலிகமாக குறைப்பதாகவும், 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஏா் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அகமதாபாத்-லண்டன் விமானம் விபத்துக்குள்ளாகி, 270-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடா்ந்து தங்களின் சேவையில் உள்ள விமானங்களில் பாதுகாப்புத் தணிக்கையை ஏா் இந்தியா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்தொடா்ச்சியாக, பெரிய ரக விமானங்களில் இயக்கப்படும் 15 சதவீத சா்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், தற்போது குறுகிய ரக விமான சேவையிலும் 5 சதவீதத்தைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்புதிய முடிவின்படி, புது தில்லி-பெங்களூரு, புது தில்லி-மும்பை உள்ளிட்ட 19 வழித்தடங்களில் 118 வாராந்திர விமான சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு-சிங்கப்பூா், புணே-சிங்கப்பூா், மும்பை- பாக்டோக்ரா ஆகிய 3 வழித்தட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல்:பிரிட்டனின் பா்மிங்ஹாமில் இருந்து புது தில்லிக்கு வந்து கொண்டிருந்த ஏா் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரியாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு, விடுதிகளில் தங்கவைங்கப்பட்டுள்ளனா் என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.