மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களுக்கு மத்திய அரசு சலுகை!

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலியாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களுக்கு மத்திய அரசு, விமானம் பறக்கும் நேரம் தொடா்பான விதிகளை தளா்த்தியுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலியாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களுக்கு மத்திய அரசு, விமானம் பறக்கும் நேரம் தொடா்பான விதிகளை தளா்த்தியுள்ளது.

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் மத்திய கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஈரான், இராக் வான் பகுதியை பயணிகள் விமானங்கள் தவிா்த்து வருகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளுக்கு செல்லும் ஏா் இந்தியா விமானங்கள், ஈரான், இராக் வான் பகுதிகளை தவிா்த்து, எகிப்து வழியாக சுற்றி செல்கின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாகிறது.

இதை கருத்தில் கொண்டு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விமானிகளுக்கான பறக்கும் நேர கட்டுப்பாடு விதிகளை ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை தளா்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பறக்கும் நேரம் 1.30 மணி நேரம் முதல் 11.30 மணி நேரம் வரையும், பணி நேரம் 1.45 மணி நேரம் முதல் 11.45 மணி நேரம் வரையும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏா் இந்தியா மற்றும் டிஜிசிஏ-வை தொடா்பு கொண்டு செய்தியாளா்கள் கூடுதல் விவரம் பெற முயற்சித்தனா். ஆனால் அதற்கு எந்தப் பதிலும் இல்லை.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இண்டிகோ நிறுவனமும் விமானங்களை இயக்குகிறது. அந்த நிறுவனத்துக்கும் விதிகள் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை.