தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூன் 2025, 1:36 am IST

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 2 ஆயிரத்து 338 கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவு:

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரத்து 187 கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில்

நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 9 லட்சத்து 36 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவா் எனவும், இதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதிக்கு நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு அளித்துள்ளது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.