ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெண் மற்றும் இளைஞனின் பகுதியளவு சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், உடல் சிதைவின் அளவைப் பார்க்கும்போது, இருவரும் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்ததாகத் தெரிகிறது.
உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. ரவிக்குமார் (18) என்ற நபரின் பாகிஸ்தானிய சிம் கார்டு மற்றும் அடையாள அட்டையும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.
சர்வதேச எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாதேவாலா பகுதியில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
உடல்கள் ராம்கர் சமூக சுகாதார மைய பிணவறைக்கு அனுப்பப்பட்டன. உடற்கூராய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.
சிறுமியும் இளைஞரும் இந்திய குடிமக்களா அல்லது பாகிஸ்தானிய குடிமக்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விஷயம் மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
summary
Bodies of minor girl, youth found near Indo-Pak border in Rajasthan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!

வியத்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்!

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



