மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
குஜராத்தில் அகமதாபாத் ரயில் நிலைய மறு கட்டுமானப் பணிகள், ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அகமதாபாத் ரயில் நிலையத்தின் புதிய வடிவமும் தோற்றமும், அகமதாபாத் நகரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்.
புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமாா் 360 கி.மீ. வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய கட்டுமானப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.
மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீள அதிவேக வழித்தடத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் நகராட்சி, படந்தால் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

ராமேசுவரத்தில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ரூ. 20.74 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



