தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: ரயில்வே அமைச்சா் ஆய்வு

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2025, 11:44 pm IST

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

குஜராத்தில் அகமதாபாத் ரயில் நிலைய மறு கட்டுமானப் பணிகள், ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அகமதாபாத் ரயில் நிலையத்தின் புதிய வடிவமும் தோற்றமும், அகமதாபாத் நகரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்.

புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமாா் 360 கி.மீ. வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய கட்டுமானப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.

மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ. நீள அதிவேக வழித்தடத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.