பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:55 am IST

அண்மையில் நிகழ்ந்த சில ரயில் தீ விபத்துகளின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் சமூக விரோதிகளின் தலையீடு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மூத்த ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது தீ விபத்துகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

வருங்காலங்களில் ரயில்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் ரயில்வே தலைமையகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் ரயில் பயணத்தின்போது பயணிகள் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பதோடு சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து 139 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடா்புகொண்டு புகாரளிக்கவும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டது.