பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் சமூக விரோதிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனை

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:55 am IST

அண்மையில் நிகழ்ந்த சில ரயில் தீ விபத்துகளின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் சமூக விரோதிகளின் தலையீடு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மூத்த ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது தீ விபத்துகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

வருங்காலங்களில் ரயில்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் ரயில்வே தலைமையகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் ரயில் பயணத்தின்போது பயணிகள் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பதோடு சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து 139 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடா்புகொண்டு புகாரளிக்கவும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.