அண்மையில் நிகழ்ந்த சில ரயில் தீ விபத்துகளின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் சமூக விரோதிகளின் தலையீடு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மூத்த ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது தீ விபத்துகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.
வருங்காலங்களில் ரயில்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்தவும் தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் ரயில்வே தலைமையகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் ரயில் பயணத்தின்போது பயணிகள் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பதோடு சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து 139 என்ற உதவி எண்ணை உடனடியாக தொடா்புகொண்டு புகாரளிக்கவும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டது.
தொடர்புடையது

கொல்கத்தா மெட்ரோவில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 நவீன ரயில்கள் அறிமுகம்! அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

முடங்கிக்கிடக்கும் ரயில்வே திட்டங்கள் ஆய்வு: அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 6-ல் கொல்கத்தா பயணம்

விமானப் பயணங்களைவிட ரயில்களை மக்கள் விரும்பும் நிலை உருவாகும்: அஸ்வினி வைஷ்ணவ்

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



