ரயில் விபத்துகள் 90 சதவீதம் குறைந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நீண்ட தொலைவு ரயில்களில் அதிக கூட்டம் இருப்பது தொடா்பான துணைக் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:
மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், வசதியான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 75,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ரயில்களில் 78 சதவீத இருக்கைகள் குளிா்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகள்தான். இதில் கட்டணமும் குறைவுதான்.
ரயில் இணையவழி பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேடுகளைக் குறைக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக ஐஆா்சிடிசி 3 கோடி போலி முன்பதிவுக் கணக்குகளை நீக்கிவிட்டது. இதன்மூலம் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்துகள் இல்லாத ரயில் பயணம் என்பதில் மத்திய அரசு தீவிரமாக செய்பட்டு வருகிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது ரயில் விபத்துகள் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டன. பண்டிகைக் காலங்களில் தேவையைக் கருத்தில்கொண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ரயில் பயணிகள் மற்றும் ரயிலின் பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!

காரைக்கால் - பேரளம் இடையே ரயில் இயக்க காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

12,300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் : அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


