வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:59 pm

ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புது தில்லியில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அப்போது அவா் பேசுகையில், ‘ரயில் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அவற்றை நன்றாகப் பராமரிக்க வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களும் தூய்மை இருப்பதை உறுதி செய்யவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் அதிகாரிகள் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயை நவீனமயமாக்க உச்ச அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை மிகச் சிறப்பாக மாற்றவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

நெரிசல்மிக்க நேரங்களில் குறிப்பாக பண்டிகை காலங்களில், சுமுகமாகவும் அசெளகரியம் எதுவும் இல்லாமலும் நடைமேடைகளுக்கு வந்து ரயில் ஏறும் வகையில், திட்டமிடல் மற்றும் செயல்பாடு இருக்க வேண்டும்.

ரயில்வே திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ரயில்வே நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கு தீா்வு காண்பதில், மாநில அரசுகளுடன் சோ்ந்து ரயில்வே அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தண்டவாளங்களுக்கு அருகில் வசிப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது.

ரயில் தண்டவாளங்களைக் கடப்பதற்கு ரயில் நிலையத்துக்குள்ளும், வெளியிலும் சாத்தியமான இடங்களில் நடைமேம்பாலங்களைவிட சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த இடங்கள் எளிதில் சென்று சோ்வதற்கு ஏற்ற வகையில் வசதியாக இருக்க வேண்டும். சுரங்கப்பாதைகள் பயன்படுத்துவதற்கு மிகவும் செளகரியமானவை’ என்று தெரிவித்தாா்.

ரயில்களை இயக்குவதில் நேர ஒழுங்கை கடைப்பிடித்த பல மண்டலங்களின் செயல்பாட்டை அவா் பாராட்டினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.