ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க, சிஎஸ்கே 230 ரன்கள் இலக்கை எட்டுவது கட்டாயம்...

News image

சென்னை அணிக்கு 230 ரன்கள் இலக்கு - PTI

Updated On :21 மே 2026, 10:02 pm IST

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான முக்கியமானதொரு ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 229 ரன்களை அதிரடியாகக் குவித்தது. இதையடுத்து, 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 20 ஓவர்களில் எட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்கி போராடி ரன் திரட்டி வருகின்றனர்.

பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னை, கடைசி முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இதில் வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களும் சென்னைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, பிளே-ஆஃப் வாய்ப்பு கனியும். ஆனால் அத்தகைய சூழல் கனியுமா என்பது சந்தேகம்தான்!

Summary

Chennai Super Kings need 230 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.