பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க, சிஎஸ்கே 230 ரன்கள் இலக்கை எட்டுவது கட்டாயம்...

News image

சென்னை அணிக்கு 230 ரன்கள் இலக்கு - PTI

Updated On :21 மே 2026, 10:02 pm IST

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான முக்கியமானதொரு ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 229 ரன்களை அதிரடியாகக் குவித்தது. இதையடுத்து, 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 20 ஓவர்களில் எட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்கி போராடி ரன் திரட்டி வருகின்றனர்.

பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னை, கடைசி முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இதில் வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களும் சென்னைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, பிளே-ஆஃப் வாய்ப்பு கனியும். ஆனால் அத்தகைய சூழல் கனியுமா என்பது சந்தேகம்தான்!

Summary

Chennai Super Kings need 230 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.