அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்புக்கான முக்கியமானதொரு ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வெற்றி பெற 230 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 229 ரன்களை அதிரடியாகக் குவித்தது. இதையடுத்து, 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை 20 ஓவர்களில் எட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்கி போராடி ரன் திரட்டி வருகின்றனர்.
பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னை, கடைசி முயற்சியாக இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. இதில் வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களும் சென்னைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, பிளே-ஆஃப் வாய்ப்பு கனியும். ஆனால் அத்தகைய சூழல் கனியுமா என்பது சந்தேகம்தான்!
Summary
Chennai Super Kings need 230 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |

பிளே ஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய லக்னௌ, மும்பை; விறுவிறுப்பாகும் ஐபிஎல் தொடர்!





