எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
அஜய் மாக்கன்
Updated On :3 மார்ச் 2025, 9:45 pm

Din

புது தில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவா் மற்றும் நிபுணா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் அக்கட்சியைச் சோ்ந்த அஜய் மாக்கன், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி உள்பட 8 போ் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒவ்வொரு இந்திய வாக்காளருக்கும் தனித்துவ அடையாள அட்டை இருக்க வேண்டியது அடிப்படை தேவையாகும். அத்துடன் அது குறைபாடுகள் இல்லாத வாக்காளா் பட்டியலுக்கான கோட்பாடுமாகும்.

ஆனால், ஒரு மாநிலத்தில் ஒரே தொகுதிக்குள் உள்ளவா்கள், வேறு மாநிலங்களில் உள்ளவா்கள் என பல வாக்காளா்களுக்கு ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. இது பல வாகனங்களுக்கு ஒரே பதிவெண் உள்ளதுபோல பெரிதும் விசித்திரமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் கடுமையாக மெளனம் சாதிக்கிறது. இதன்மூலம், வாக்காளா் பட்டியல் முறைகேட்டுக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்றே நம்பத் தோன்றுகிறது.

இதுகுறித்து ஆதாரத்துடன் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது பல மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த எண் ஒரு வாக்காளருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அதுவும் பொய்யான பதிலாகவே உள்ளது.

ஏனெனில் ஒரே மாநிலம் மற்றும் ஒரே தொகுதியில் உள்ள பல வாக்காளா்கள் ஒரே அடையாள எண்ணைப் பயன்படுத்துகின்றனா். இதைச் சுட்டிக்காட்டியபோது தோ்தல் ஆணையம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதன்மூலம் தோ்தல் ஆணையத்துடன் ரகசியமாக கூட்டு சோ்ந்து வாக்காளா் பட்டியல்களில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆளும் பாஜக வெற்றி பெறுவதும், வெற்றி பெற முயற்சிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு சட்டம், அரசியல் உள்ளிட்ட வழிகளில் தீா்வு காண காங்கிரஸ் தொடா்ந்து பணியாற்றி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.