இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாதுகாவலராக பணிபுரிபவர் பிரமோத் பாண்டே (56). இவர் கடந்த சனியன்று (மார்ச். 3) இரவுப் பணியின் போது தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இதைப் புகைப்படம் எடுத்த நகைக்கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜக்தப் (49), ஊழியர்களின் வாட்சப் குழுவில் அதனைப் பகிர்ந்தார்.
இதனால், பிரமோத் கோபமடைந்தார். ஞாயிறன்று இரவு ஜக்தப் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டதில் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த ஜக்தப் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
துப்பாக்கியால் சுட்ட பிரமோத்தை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

ரயில் மோதியதில் தண்டவாளத்தில் தூங்கிய இளைஞா் உயிரிழப்பு
எதிர்காலம் எழுகிறது! வைரலாகும் விஜய் பாதுகாவலர் பதிவு!
சுடுமண்ணில் மிளிரும் கலைவண்ணம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


