வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அமெரிக்கா: ஹிந்து கோயிலில் தாக்குதல்

கலிபோர்னியாவில் ஹிந்து கோயிலில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

News image

சுவாமி நாராயணன் கோயில்

Updated On :9 மார்ச் 2025, 1:31 pm IST

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலின் சுவர்களில் `ஹிந்துக்கள் திரும்பிச் செல்லுங்கள்’ என்ற வாசகங்களுடன் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து, கோயிலை நிர்வகித்து வரும் பாப்ஸ் அமைப்பு கூறியதாவது, ``கலிபோர்னியாவில் மற்றொரு கோயிலும் அவமதிக்கப்பட்டுள்ளது. வெறுப்புக்கு எதிராக ஹிந்து சமூகம் உறுதியாக நிற்கிறது. வெறுப்பை அடியோடு பிடுங்க, கலிபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் 10 ஹிந்து கோயில்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்து, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.