அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலின் சுவர்களில் `ஹிந்துக்கள் திரும்பிச் செல்லுங்கள்’ என்ற வாசகங்களுடன் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, கோயிலை நிர்வகித்து வரும் பாப்ஸ் அமைப்பு கூறியதாவது, ``கலிபோர்னியாவில் மற்றொரு கோயிலும் அவமதிக்கப்பட்டுள்ளது. வெறுப்புக்கு எதிராக ஹிந்து சமூகம் உறுதியாக நிற்கிறது. வெறுப்பை அடியோடு பிடுங்க, கலிபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் 10 ஹிந்து கோயில்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்து, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிதி முறைகேடு புகார்கள் பொய்யெனில் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை: விஸ்வ ஹிந்து பரிஷத்

கோயில் விழாவில் தகராறு: 6 போ் மீது வழக்கு
ஈரான் மீது அமெரிக்க போா் விமானங்கள் 2-ஆவது நாளாக குண்டுவீச்சு! மத்திய ஆசியாவில் மீண்டும் போா்ப் பதற்றம்!
வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



