புது தில்லி: பிரதமா் மோடியை அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்பின்போது கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபா் டிரம்ப், துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரை சந்தித்து ஆக்கபூா்வமாக பேசியதை பிரதமா் மோடி நினைவுகூா்ந்தாா்.
பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள், பயங்கரவாத எதிா்ப்பு, உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளுதல் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் துளசி கப்பாா்ட் முக்கிய பங்காற்றுவதாகப் பிரதமா் மோடி பாராட்டினாா்.
நிகழாண்டு அமெரிக்க அதிபா் டிரம்ப்பை இந்தியாவுக்கு வரவேற்க, 140 கோடி இந்தியா்களும் ஆவலாக இருப்பதாக துளசியிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா் என்று பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு

காங்கிரஸால் பின்தங்கிய கிழக்கிந்தியா இப்போது வளா்ச்சியின் நுழைவாயில்! பிரதமா் மோடி

இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்







