நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

இந்திய ஆன்லைன் கேமிங் துறை வர்த்தகம் 2029-க்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும்!

இந்திய ஆன்லைன் கேமிங் துறை பற்றி...

கோப்புப் படம்

Published On :19 மார்ச் 2025, 6:41 pm IST

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வர்த்தகம் வருகிற 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும் என அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் கேம் டெவலப்பர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பணம் செலுத்தி விளையாடும் கேமிங் தளமான வின்ஸோ கேம்ஸ் (WinZo) மற்றும் பொழுதுபோக்கு கவுன்சில் (ஐஈஐசி) இணைந்து இந்திய கேமிங் துறை வர்த்தகம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், ’இந்திய ஆன்லைன் கேமிங் துறையின் வருமானம் 2024 ஆம் ஆண்டில் ரூ. 32,000 கோடியாக இருந்தது. இதில், உண்மையான பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் 86% பங்குகளைப் பெற்றுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இந்திய ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உள்ளது. இது வருகிற 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ. 78,000 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2029 ஆம் ஆண்டுக்குள் ரூ. 5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள், ஐபி உருவாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் ஈடுபாட்டில் தொடர்ந்து நாம் நமது எல்லைகளை விரிவுபடுத்தி வந்தால், வின்ஸோ நிறுவனம் இந்தியாவை உலகின் கேமிங் மையமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது” என வின்ஸோ கேமிங் நிறுவன துணை நிறுவனர் பாவன் நந்தா தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 59 கோடி கேமர்கள் உள்ளனர். மொத்தம் 1100 கோடி அளவிலான கேம் செயலிகளின் பதிவிறக்கங்களுடன் உலகின் 20% கேமர்கள் இந்தியாவில் உள்ளனர். கூகுள் ப்ளேஸ்டோருக்கு மாற்றாக பல தளங்கள் மூலம் இவை பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

இந்தத் துறையில் மொத்தம் 1900 கேமிங் நிறுவனங்கள் 1.3 லட்சம் திறன் வாய்ந்த நிபுணர்களைப் பணியமர்த்தியுள்ளனர். இதில், அந்நிய நேரடி முதலீடாக ரூ. 26,000 கோடி பெறப்பட்டுள்ளது.

கேமிங் துறையில் உண்மையான பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் தற்போது 85.7% ஆக உள்ளது. அது 2029 ஆம் ஆண்டில் 80 % ஆக குறையும் என்றும் பணம் செலுத்தாமல் விளையாடும் விளையாட்டுகளின் வளர்ச்சி 14.3% முதல் 20% வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், வளர்ந்து வரும் கேம் டெவலப்பிங் துறை, சாதகமான நடைமுறை ஆகியவற்றால் இந்தத் துறையின் சந்தை மதிப்பு 2034 ஆம் ஆண்டுக்குள் ரூ.5 லட்சம் கோடி உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைகளை உருவாக்குவது, அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது மற்றும் இந்திய அறிவுசார் சொத்து (ஐபி) ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.