ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம்

News image

ENS

Updated On :26 மார்ச் 2025, 4:12 pm

DIN

ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி கிராமப்புற மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அனில் டைகர் என்பவரை, புதன்கிழமை பகல்வேளையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பைக்கில் தப்பியோடி விட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஜார்க்கண்ட் காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் குப்தா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கூறினார்.

இந்த நிலையில், அனில் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜகவும் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி தெரிவித்ததாவது, ``பாஜக ராஞ்சி கிராமப்புற மாவட்ட பொதுச் செயலாளரும் முன்னாள் மாவட்ட பரிஷத் உறுப்பினருமான அனில் டைகர், கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலத்தில் குற்றவாளிகள் அச்சமேதுமின்றி, மக்கள் பிரதிநிதிகளைத் தாக்குகின்றனர்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை முற்றிலும் சரிந்து விட்டது. சாமானிய குடிமக்களோ மக்கள் பிரதிநிதிகளோ மாநிலத்தில் பாதுகாப்பாக இல்லை. இந்த கொலை சம்பவத்துக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று, உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.

மேலும், மாநிலத்தின் மோசமான நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், முழு அடைப்புப் போராட்டத்துக்கு மக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.