திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் சொல்லியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

News image

மக்களவையில் நிர்மலா சீதாராமன் - PTI

Updated On :27 மார்ச் 2025, 12:22 pm IST

தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதா, 2025-ஐ ஆதரித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், வாட்ஸ்ஆப் சாட்கள் மூலம் கணக்கில் வராத ரூ.200 கோடி பணம் கண்டறியப்பட்டு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், கூகுள் மேப் பயன்படுத்தியதன் அடிப்படையில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் பினாமி சொத்துகளின் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்த அதிகாரம் அளிப்பதன் மூலம், மிகவும் தீவிரமான வரி ஏய்ப்புகள் மற்றும் நிதி முறைகேடுகள் பலவும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படுகிறது என்றார்.

கிரிப்டோகரன்சி மூலம் நடக்கும் முறைகேடுகளைக் கண்டறிய, வரித்துறை அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும், புதிய வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் வணிக மென்பொருள்கள், சர்வர்களையும் பயன்படுத்தி, மறைக்கப்பட்டிருக்கும் நிதிகளை வெளிக்கொணர உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தனிநபர்களின் வாட்ஸ்ஆப் சாட்களை மத்திய அரசு படித்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.