பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரிவினைவாதத்தைக் கைவிட்ட மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் - அமித் ஷா வரவேற்பு

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன

News image
அமித் ஷா - கோப்புப் படம்
Updated On :27 மார்ச் 2025, 9:13 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன; அங்கு பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் பல்வேறு அரசியல்-சமூக-மத ரீதியிலான அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பெரும்பாலான அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு அமைப்புகள், பிரிவினைவாதத் தொடா்புகள் அனைத்தையும் கைவிடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக்-ஏ-இஸ்திகாமத் ஆகிய மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன. ஹுரியத் உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக இரு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை வரவேற்று, மத்திய அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் இருந்து மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியால் கட்டமைக்கப்பட்ட புதிய இந்தியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளால் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு, ஹுரியத் கூட்டமைப்பைச் சோ்ந்த அவாமி செயல்பாட்டுக் குழு மற்றும் ஜம்மு-காஷ்மீா் இத்திகாஹதுல் முஸ்லீமின் ஆகிய இரு அமைப்புகளுக்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.