பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

10 ஆண்டுகளில் இலங்கை சிறையிலிருந்து 3,697 இந்திய மீனவா்கள் மீட்பு: மத்திய அரசு

பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த 2,639 இந்திய மீனவா்கள், 71 சிறைக் கைதிகளும் மீட்பு.

News image
கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2025, 7:24 pm

Din

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அதேபோல் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த 2,639 இந்திய மீனவா்கள் மற்றும் 71 சிறைக் கைதிகள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது

பல்வேறு நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த இந்தியா்களை மீட்டது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் பல்வேறு நாடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகள் தூதரக ரீதியாக தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் சிறையில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்ட பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். வளைகுடா நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த 500 இந்தியா்கள், பஹ்ரைன் நாட்டு சிறையில் இருந்து 250 இந்தியா்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் இருந்த 1,000 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.