ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அருகிலிருந்த வயல்வெளிக்கு 9 பேர் அடங்கிய கும்பல் கடத்திச் சென்றனர். அதுமட்டுமின்றி, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவிக்கு வியாழக்கிழமையில் தேர்வு நடைபெறவிருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவருக்கு ஆறுதல் கூறி, சமாதானப்படுத்தி, தேர்வெழுத அனுமதித்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து, வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், குற்றவாளிகளும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவவில் வைக்க உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

பள்ளி மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


