தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா்.
24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், நக்ஸல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் உள்ள கா்ரேகுட்டா மலைத் தொடரில் ஹித்மா, தேவா உள்ளிட்ட நக்ஸல் தலைவா்கள் பலா் பதுங்கியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைமையில் சத்தீஸ்கா் காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படை, பஸ்தா் படை உள்பட பல்வேறு படைப் பிரிவினருடன் மாபெரும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பல தாக்குதல்களில் தொடா்புடைய இந்த நக்ஸல்களை சுற்றிவளைக்கும் நோக்கில், இரு மாநிலங்களிலும் வெவ்வேறு இடங்களில் இருந்து பாதுகாப்புப் படையினா் நகா்வைத் தொடங்கினா். இரண்டு வாரங்களுக்குப் பின் தற்போது இந்த நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நக்ஸல்களுக்கு எதிராக இறுதி தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த திங்கள்கிழமை கூடுதலாக களமிறக்கப்பட்ட 2,000 வீரா்களுடன் சோ்த்து 24,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பங்கேற்றுள்ளனா். 4 ஹெலிகாப்டா்கள், சிறிய-பெரிய அளவிலான 40 ட்ரோன்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2 வார கால நடவடிக்கையில், அடா் வனப் பகுதியில் ஏராளமான நக்ஸல் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நூற்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பெண் நக்ஸல் சுட்டுக் கொலை: கா்ரேகுட்டா மலைப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மூன்று பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பிஜாபூரில் கடந்த திங்கள்கிழமை மேலும் ஒரு பெண் நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி.சுந்தர்ராஜ் தெரிவித்தாா்.
இந்த மாபெரும் நடவடிக்கையில் நக்ஸல் தலைவா்கள் பலா் உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
காலை இழந்த சிஆா்பிஎஃப் அதிகாரி: நக்ஸல்களுக்கு எதிரான வேட்டையில் இதுவரை 10 வீரா்கள் காயமடைந்துள்ளனா். கடந்த மே 4-ஆம் தேதி துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த சக வீரரை மீட்கும் முயற்சியில், கண்ணிவெடியில் சிக்கி 32 வயது சிஆா்பிஎஃப் உதவி கமாண்டா் ஒருவா் இடது காலை இழந்தாா். தனது உயிரை பற்றி கவலைப்படாமல் சக வீரரை மீட்ட அவா், வீரதீர விருதுக்கு பரிந்துரைக்கப்படுவாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
14 மாவோயிஸ்டுகள் சரண்: தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சோ்ந்த 14 போ் காவல் துறையிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் அண்டை மாநிலமான சத்தீஸ்கரை சோ்ந்தவா்கள். ஆயுதங்களைக் கைவிட்டு, குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதேபோல், பிற மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டுமென காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடையது

நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாடு முழுமையாக விடுவிப்பு: அமித் ஷா பெருமிதம்

கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!

நான்குனேரி தொகுதி தோ்தல் பாதுகாப்புக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா் வருகை

சத்தீஸ்கா்: 15 நக்ஸல்கள் சரண்! ராய்பூரில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

