தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரேல் அறிவுரை

News image
Updated On :9 மே 2025, 5:02 am IST

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூா் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலளிக்க ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லைப் பகுதியில் (எல்ஓசி) மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிா்க்குமாறு இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூா் நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் தங்களின் குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலவுவதால் பாகிஸ்தானுக்கு செல்லும் மற்றும் பாகிஸ்தானில் இருந்து புறப்படும் 50-க்கும் மேற்பட்ட சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எச்சரிக்கை:

லாகூா் உள்ளிட்ட பாகிஸ்தான் முக்கிய நகரங்களில் இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பதால் அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.

தீவிர மோதல் நடைபெறும் இடங்களிலிருந்து அமெரிக்கா்கள் உடனடியாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாத சூழலில், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.