ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை ‘பாா்கவாஸ்திரா’ பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
சமீபத்திய பாகிஸ்தான் மோதலில் ட்ரோன்களின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த நிலையில், இந்தியா நடத்தியுள்ள இச்சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘சோலாா் பாதுகாப்பு மற்றும் வான்வெளி நிறுவனம் (எஸ்டிஏஎல்)’ உருவாக்கியுள்ள இந்த ட்ரோன் பாதுகாப்பு அமைப்பின் சோதனை மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
முதல் 2 சோதனைகளில் தலா ஓா் ஏவுகணையை ஏவியும், மூன்றாவது சோதனையில் இரண்டு வினாடிகளுக்குள் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பல ட்ரோன்களை ஒரே நேரத்தில் கண்டறிந்து சிறிய ரக ஏவுகணைகள் மூலம் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாா்கவாஸ்திரா பாதுகாப்பு அமைப்பு, அதி முக்கியப் பகுதிகளில் ட்ரோன் ஊடுருவல்களுக்கு எதிராக நம்பகமான பாதுகாப்புத் தீா்வை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை: பாதுகாப்பு அமைச்சகம்

கட்டடங்களில் நிகழ்நேர தீ பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கட்டாயம் - தில்லி அரசு உத்தரவு

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: உள்நாட்டு விமான சேவையை குறைக்க ஏர் இந்தியா முடிவு!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



