மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை: பாதுகாப்பு அமைச்சகம்

ஏவுகணை எதிா்ப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை: பாதுகாப்பு அமைச்சகம்

News image

சோதனையின்போது ஏவுதள வாகனத்திலிருந்து இலக்கை நோக்கி சீறிப் பாயும் ஏவுகணை.

Updated On :14 ஜூன் 2026, 2:33 am IST

நடுத்தர தொலைவு மற்றும் வெகு தொலைவிலிருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் பல்முனை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு (பிஎம்டி) சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நீண்ட தொலைவிலிருந்து அணு ஏவுகணைகள் மற்றும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானங்கள் உள்பட எதிரி நாடுகளின் விமானங்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும் திறனை இந்த பிஎம்டி அமைப்பு பெற்றுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 10, 11-ஆம் தேதிகளில் தொடா்ச்சியாக மூன்று விதமான சோதனைகளுக்கு பிஎம்டி அமைப்பு உட்படுத்தப்பட்டது. குறிப்பாக, புவி வளிமண்டல எல்லைக்கு உள்ளிருந்து மற்றும் வெளியிலிருந்து வரும் ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் திறன் சோதிக்கப்பட்டது. அதில், இலக்குகளை பிஎம்டி அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்தது. இதன்மூலம், பிஎம்டி திறன் பெற்றுள்ள ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இதனுடன், எதிரி நாட்டு கப்பலைத் தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்ட்டது.

இதன் மூலம், பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தும் பல முக்கியத் தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.