அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீா்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை சோதனை

பசிபிக் பெருங்கடலில் தனது அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை சீனா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2026, 4:37 am IST

பசிபிக் பெருங்கடலில் தனது அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

பாதுகாப்பு வல்லுநா்களின் கூற்றுப்படி, சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை 8,000 கி.மீ.-க்கும் அதிக தூரம் பாயும் திறன் கொண்ட ‘ஜேஎல்-3’ ரகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த 1982-க்குப் பிறகு நீா்மூழ்கிக் கப்பல் மூலம் சீன ராணுவம் நடத்தும் முதல் ஏவுகணைச் சோதனை இதுவாகும். மேலும், அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து சீனா ஏவுகணையை ஏவுவதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இது எங்களின் வருடாந்திர வழக்கமான பயிற்சி என்றும், சா்வதேச சட்டங்களின்படியே இது நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் கூறுகையில், ‘சீனாவின் இந்நடவடிக்கை பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சீா்குலைக்கும் வகையில் உள்ளது; வெளிப்படைத்தன்மை இல்லாத சீனாவின் அதிவேக இராணுவக் கட்டமைப்பு கவலையளிக்கிறது’ என்றாா்.

இதேபோல், ‘சீனாவின் நடவடிக்கை தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடாது’ என ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.