/
ஒடிஸா கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நீண்ட தூர நில இலக்கை தாக்கி அழிக்கும் அதிவேக ஏவுகணை (எல்ஆா்எல்ஏசிஎம்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதையடுத்து, பல்வேறு கண்காணிப்பு கருவிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளில் சோதனையில் அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, டிஆா்டிஓ குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.
டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகள் இணைந்து உள்நாட்டிலேயே தயாரித்த எல்ஆா்எல்ஏசிஎம் ஏவுகணையின் ஒருங்கிணைப்பு ஆய்வகமாக பெங்களூருவில் உள்ள வானூா்தி மேம்பாட்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது.










