கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! - சிவசேனை

பஹல்காம் பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும்: சிவசேனை

News image

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் போஸ்டர்

Updated On :15 மே 2025, 4:24 pm

DIN

மும்பை: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி வகிக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி மேற்கண்ட வெகுமதியை அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் காவல்துறை அவர்களை கண்டுபிடிக்க உதவிகரமாக துப்பு அளித்தால் ரூ.20 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், துப்பு அளிப்போருக்கு தங்களது தரப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்குவதாக சிவசேனை அறிவித்துள்ளது.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மகாராஷ்டிரத்திலிருந்து அங்கு சுற்றுலா சென்றிருந்த 6 பேர் மரணமடைந்தனர். பஹல்காம் தக்குதலில் மொத்தம் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.