இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஒடிசாவில் மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2025, 6:44 pm IST

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் 2 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலங்கீரின் கந்தாமார்தன் மலைப்பகுதி மற்றும் சத்ராதண்டி வனப்பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (மே 15) சோதனைகள் மேற்கொண்டனர்.

மாவட்ட தன்னார்வப் படை (DVF), மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (SOG) ஆகிய படைகள் மேற்கொண்ட இந்தச் சோதனைகளில் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்டுகளின் முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.

ஆனால், பாதுகாப்புப் படையினரின் வருகைக்கு முன்னரே அங்கிருந்த மாவோயிஸ்டுகள் தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த முகாம்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அங்கிருந்து ஏராளமான வெடிகுண்டுகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அடர்ந்த காடுகள் நிரம்பிய அப்பகுதியின் வழியாக அங்கு செயல்படும் மாவோயிஸ்டுகள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இடையில் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.