வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜௌரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

ரஜௌரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

News image

பள்ளிகள் திறப்பு

Updated On :22 மே 2025, 4:05 pm IST

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இதனால் இருநாட்டுத் தரப்பிலும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இந்தியா அழித்தது. அதற்குப் பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இறுதியா இருநாட்டு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது.

இந்த, நிலையில் காஷ்மீர் எல்லையில் பதற்றம் காரணமாக ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜௌரி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிலைமை அங்கு சீரடைந்ததையடுத்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்படத் தொடங்கின.

ஷெல் தாக்குதலின்போது பள்ளி கட்டடங்களும் சேதமடைந்தன. அவற்றை தற்போது முடிந்தவரைச் சரிசெய்யபட்டுள்ளதாகவும், மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.