கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது

News image
Updated On :23 மே 2025, 7:29 pm

Din

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்கி கா்நாடகத்தைச் சோ்ந்த 22 வயது மாணவி மருத்துவம் படித்து வந்தாா். கடந்த 18-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது நண்பருடன் திரைப்படத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தாா். அந்த நண்பரை அழைப்பதற்காக அவா் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது, அந்த நண்பா் அப்பெண்ணுக்குத் தெரியாமல் குளிா்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அரை மயக்கத்தில் இருந்த அப்பெண்ணை, அந்த நண்பா் மற்றும் அப்பெண்ணுடன் படிக்கும் இரு மருத்துவ மாணவா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா். அப்போது அவா்களும் மது அருந்திய நிலையில் இருந்தனா். இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் அப்பெண்ணை மூவரும் மிரட்டினா்.

இந்த சம்பவம் குறித்து அப்பெண் முதலில் தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் உடனடியாக மகாராஷ்டிரத்துக்கு வந்து, மகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகாா் அளித்தனா். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்தனா். அவா்கள் 20 முதல் 22 வயதுக்குள்பட்டவா்கள் ஆவா். இந்த சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.